Header Ads



யாழ்ப்பாணத்தில் புற்று நோயாளர் எண்ணிக்கை அதிகரிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் புற்று நோயாளர்களின் எண்ணிக்கை 2926 பேராக அதிகரித்துள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை புற்றுநோய் வைத்திய நிபுணர் என்.ஜெயக்குமார் தெரிவித்தார். 

தெல்லிப்பழை புற்றுநோய் கதிர்வீச்சுப்பிரிவு செயல்படத்தொடங்கி ஆறு ஆண்டுகள் நிறைவு பெறுவதைக் குறிக்கும் முகமாக வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்விலேயே அவர் இத்தகவலைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

எம்மால் முடிந்த வரை புற்றுநோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கி வருகின்றோம்.நோயாளர் நலன்கருதி கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை உட்பட குடாநாட்டின் ஆதாரவைத்தியசாலைகளில் கிளினிக்கை நடத்தி வருகின்றோம்.எமது நோயாளிகள் கதிர்வீச்சு சிகிச்சைக்காக கொழும்பு செல்லும் நிலை இப்போது முழுமையாக நீங்கியுள்ளது. மகரகம தேசிய புற்றுநோய் வைத்தியசாலைக்கு அடுத்தபடியாக யாழ்ப்பாணம் போதனாவைத்தியசாலை புற்றுநோய் பிரிவே தற்போது சிறப்பாக செயற்படுகிறது என்றார்

No comments

Powered by Blogger.